#BREAKING: சென்னையில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Default Image

சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,444-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 42,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் ஒரே நாளில் 1,487  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறைத்துறை தெரிவித்துள்ளது.

இதில், 14,180 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 15,947 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 316 பேர் உயிரிழந்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்