சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் வழக்கு தொடுக்கப்பட்டியிருந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு 3 வழக்குகளை பதிவு செய்த நிலையில், ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. மேலும், 2 வழக்குகளில் பண மோசடியை மையமாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக ஆக.9ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜராக அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை முன் ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கோரி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க உள்ளதால் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…