#Breaking : 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!

Default Image
  • 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான டோக்கன், மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வந்தது. அதில், எந்த நாளில் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். 14 வகையான மளிகை பொருட்களுடன், கொரோனா நிவாரண நிதி ரூ.2,000-த்தையும் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை நானடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனும் கலந்து கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்