#Breaking:மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் கேள்வி…!

Published by
Edison

மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவபடிப்பு அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதாவது,மருத்துவப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில்,அகில இந்திய இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடுகள் முறையாக வழங்கப்பட வேண்டும்,குறிப்பாக தமிழக அரசுக்கு 69% ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்று கடந்த ஆண்டு திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால்,கடந்த ஆண்டு மாணவர் சேர்க்க அமல்படுத்த முடியாது என்பதால் மத்திய ,மாநில அரசுகள் இணைந்து ஒரு குழு அமைத்து 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,குழு மட்டும் அமைக்கப்பட்டு,பரிந்துரைகள் வழங்கப்பட்டு,அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில்,இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை.

இதற்கிடையில்,இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக மட்டுமே மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில்,கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் 69% இடஒதுக்கீட்டை மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில்,அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை?, அதனை நிறைவேற்றுவதுதான் நீதிமன்ற உத்தரவை மதிப்பதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு குறிப்பாக 50% இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,தற்போது 10% மட்டுமே ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.இதனால்,50 சதவீதத்தில் குறைபாடு ஏற்படும் என்பதால்,இந்த 10% ஒதுக்கீடு என்பது 50% இட ஒதுக்கீட்டில் வருமா? அல்லது தனியே வருமா? என்று மத்திய அரசிடம் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Published by
Edison

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு! 

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

2 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

2 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

4 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

4 hours ago