தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் தற்போது முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளதாவது:”தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.குறிப்பாக சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் உயர்ந்துள்ளது.ஒமைக்ரான் தொற்றின் புதிய வகையால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.எனினும் உயிரிழப்புகள் உயரவில்லை என்பது ஆறுதல் அளித்துள்ளது.
கொரோனவை கட்டுப்படுத்த நம் வசம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி தான்.ஏனெனில்,தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.எனவே,இனி வரும் வாரங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை,பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும்,இடங்களிலும்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக,கொரோனா பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்”,என்று கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…