#BREAKING: தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் மகேந்திரன்!!

Default Image

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தற்போது தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் மகேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார். மநீம-வில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்தார்.

மேலும், 11,000 நிர்வாகிகள் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்