#BREAKING : மதுசூதானனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது…!

Default Image

மறைந்த மதுசூதனன் அவர்களின் பூத ஊடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

அதிமுக அவை தலைவர் மதுசூதனன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மதுசூதனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தற்போது மறைந்த மதுசூதனன் அவர்களின் பூத ஊடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில், ஓபிஎஸ் உளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்