சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்று கொண்டார். தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதை அடுத்து துரைசாமி பதவியேற்று கொண்டார். உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற துரைசாமி செப்டம்பர் 21-ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார். முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், பிறகு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். நேற்றுடன் அவருக்கு 62 வயது நிறைவடைந்ததையடுத்து நேற்று மாலையுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதனிடையே, உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, இன்று எம்.துரைசாமி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…