ஆகஸ்ட் 1-ஆம் தேதி தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அதிகாரிக்கு கடிதம்.
ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இதனையடுத்து, இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு முன்னதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் புதியதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்துக்கு மாறி மாறி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…