#BREAKING : தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பில் கடிதம்..!

Default Image

ஆகஸ்ட் 1-ஆம் தேதி தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அதிகாரிக்கு கடிதம். 

ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இதனையடுத்து, இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு முன்னதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் புதியதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்துக்கு மாறி மாறி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்