#BREAKING: அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்க கோரி கடிதம்..!

Default Image

அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் அதிகமாக சென்னையில் தான் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை,  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,070 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா மருத்துவ முகாம் அமைக்க குறிப்பிட்ட காலத்திற்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்