#BREAKING: அக்.19ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! – சபாநாயகர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அஞ்சலை பொன்னுசாமி, சிபிஎம் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும், முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோவை தங்கம், ஹக்கீம், அமீது இப்ராகிம், வீரப்பன், ராஜா, பச்சையப்பன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், திருவேங்கடம் உள்ளிட்டோருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்வில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக பங்கேற்கவில்லை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார். இதன்பின், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலோசிக்க சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மட்டும் பங்கேற்றார்.

இந்த நிலையில், அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழுவில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 19ம் தேதி வரை 2 நாட்களுக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2022-23-ஆம் ஆண்டுக்கான கூடுதல் வரவு, செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்றும் இந்தி திணிப்பு போராட்டம் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

14 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

38 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago