கோடநாடு தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடித்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக தனிப்படை அமைப்பு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தெரிவித்துள்ளார். கோடநாடு தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடித்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையானது கோடநாடு தொடர்பான வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தனிப்படையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இன்று உதகை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், வழக்கு தொடர்பான சயான், மனோஜ் ஆஜரானார். அப்போது, அரசு தரப்பில், புலன் விசாரணை நடத்த அவகாசம் கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…