#BREAKING: அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் பரிசுப் பொருட்கள் காணவில்லை!

Default Image

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் காணவில்லை என தகவல்.

கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பினருக்கு இடையே நடந்த கலவரத்தை தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மூடி சீல் வைத்தார். இதன்பின் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருதரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டது. இதன்பின் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்குமாறு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகளால் அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு, அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகரனிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் மீண்டும் திறக்கப்பட நிலையில் இபிஎஸ் தரப்பினர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை காணவில்லை என தகவல் கூறப்படுகிறது. அதன்படி, மூன்றாவது தளத்தில் இருந்த ஹார்டு டிஸ்க், செங்கோல் உள்ளிட்ட விலை உயர்ந்த மற்றும் முக்கியமான பொருட்களை காணவில்லை என கூறப்படுகிறது. கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயமானது என்றும் காணாமல் போன பொருட்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.

10 நாட்களுக்கு பிறகு சீலை அகற்றி அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே, அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் புகார் கொடுக்க ஈ.பி.எஸ். தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்