#BREAKING: ஓபிஎஸ்ஸை அனுமதிக்க கூடாது என ஜெயக்குமார் மனு!

Default Image

ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு.

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைவதை தடுக்க பாதுகாப்பு தேவை. அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமச்சர் சிவி சண்முகம் ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கட்சியில் உறுப்பினர் அல்லாத ஒருவர் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை எப்படி கோர முடியும் என கேள்வி எழுப்பினார். இதனிடைய, அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, நேற்று எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தார். அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீதிமன்றம் அனுமதி அளித்தால் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.  இந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்