ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ உண்மைதானா என கண்டறிய செல்போனை ஆய்வு செய்கிறது காவல்துறை.
கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, விபத்து நடந்த அன்று, அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் சிலர் ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக எடுத்த வீடியோ காட்சி என்று இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்த கடைசி நிமிட வீடியோ குறித்து எந்தவித உண்மையும் விமானப்படை சார்பில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக படம் பிடித்த நபரின் செல்போன் காட்சி உண்மையா? என்பதை ஆய்வு செய்ய கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு போலீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி உள்ளதா என மின்வாரியத்திடம் நீலகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது என்றும் விபத்தின் போது நிலவிய வானிலை குறித்து தகவல் தர சென்னை வானிலை மையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளது எனவும் கூறப்படுகிறது.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…