#BREAKING : பயங்கரவாதிகளுடன் தொடர்பு? கோவையில் 3 பேரிடம் விசாரணை

கோவையில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரிடம் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
மத்திய உளவுத்துறை நேற்று தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ரயில்,பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிகவளாகங்களில் காவல்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் இதன் தொடர்ச்சியாக காவல்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேரிடம் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த மூவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.3 பேரில் இருவர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கோவையை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025