#BREAKING: மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

- மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.
- மறைமுக தேர்தலுக்கு எதிரான திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழக அரசு மேயர்,நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது.இந்த மறைமுகத் தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்தார்.
அவரது வழக்கில்,மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது .இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அதில்,மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்டவிரோதம் அல்ல என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.மேலும் தன்னை குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சட்டப்படியான உரிமை,அடிப்படை உரிமை அல்ல என்றும் தெரிவித்தது.பின்னர் திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025