#BREAKING: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சர் உத்தரவு!

Chief Minister MK Stalin's order to increase the internal rate of return for Tamil Nadu government employees.

தமிழக அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 17%ல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.8,894 நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதில், அகவிலைப்படி 17%ல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இதற்கு ரூ.8,724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சி & டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.169.56 கோடியை ஒதுக்கி முதல்வர் அறிவித்துள்ளார்.

unknown node