#Breaking : மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

Default Image

மயிலாடுதுறையில் பள்ளி கல்லூரிகளுக்கும், திண்டுக்கலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் ஏற்கனவே 21 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம்  கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 21 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறையில் பள்ளி கல்லூரிகளுக்கும், திண்டுக்கலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்