ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்த விதிமுறைகளோடு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் ஊர்களில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டனர். அப்போது தமிழக அரசு, இந்த சேவல் சண்டையின் போது, சூதாட்டம் நடைபெறுவதாகவும் சேவல்கள் துன்புறுத்தப்படுவதாகவும் அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தால் அனுமதி அளிக்கலாம் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,
மேற்கண்ட விதிமுறைகளை விதித்து ஈரோடு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை மீறினால், விழா ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…