தமிழகம்:உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார திட்டங்களுக்காக மத்திய நிதி அமைச்சகமானது, தமிழகத்துக்கு ரூ.805 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பதினைந்தாவது நிதிக் குழு (FC-XV) 2021-22 முதல் 2025-26 வரையிலான தனது அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.4,27,911 கோடி மானியம் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. ஆணையம் பரிந்துரைத்த மானியங்களில் ரூ.70,051 கோடி சுகாதார மானியங்களும் அடங்கும். இந்த தொகையில் ரூ.43,928 கோடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,19 மாநிலங்களின் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதாரத் துறை மானியமாக ரூ.8,453.92 கோடியை நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த மானியங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில்,தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார திட்டங்களுக்காக ரூ.805.92 கோடி கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…