#BREAKING: செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!

Default Image

தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு. 

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், தற்போது அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் நீர் தேங்கியிருந்ததால் விடுமுறை விட அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார். எனவே, நீர் தேங்கியிருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்