சிம்லா:சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆளுநர்கள் அரசுகள் அனுப்பும் கோப்புகள் மீது எந்தவிதமான முடிவுகளையும் எடுப்பதில்லை.அவ்வாறு எடுத்தாலும் மிகவும் காலத்தாமதமாக எடுக்கிறார்கள்.இதனால்,மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அரசுகளுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது என்று நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சட்டமன்றங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில்,சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வலியுத்தியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:”சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது விவாதத்திற்குரியதாக உள்ளது.எனவே,சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கும் உடனடியாக அதனை அனுப்ப வேண்டும் என்று இமாச்சலப்பிரதேசத்தின்,சிம்லாவில் நடைபெறும் மாநில சட்டப்பேரவை சபநாயக்கர்கள் மாநாட்டில் அப்பாவு இதனை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …