ராமநாதபுரம்:சாயல்குடி அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள வாகைக்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் மேற்கூரையின் கட்டை கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கட்டை தலையில் விழுந்ததில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து,அவர்கள் இருவரையும் சாயல்குடி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நான்காம் வகுப்பு மாணவி மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடக்கப்பள்ளி 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில்,ஏற்கனவே கட்டடத்தின் தன்மை குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததாகவும், ஆனால்,கல்வி அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…