#BREAKING: “மரைன் எலைட்” படையை நிறுவ தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Default Image

கடல் பாதுகாப்பு, கடல் வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்த “மரைன் எலைட்” படையை நிறுவ தமிழக அரசு உத்தரவு.

மன்னர் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடாவில் கடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “மரைன் எலைட்” படையை நிறுவ தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடல் பாதுகாப்பை உறுதி செய்ய மரைன் எலைட் படையை உருவாக்க ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. கடல் பாதுகாப்பு, கடல் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் இந்த “மரைன் எலைட்” படை செயல்படும் என தெரிவித்துள்ளது. தமிழக அரசு நிறுவவுள்ள “மரைன் எலைட்” படையில் இரு பிரிவுகள் இருக்கும் என்றும் ஒரு பிரிவுக்கு 5 கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்