சேலம்:அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி புகாரில்,ஈபிஎஸ் அவர்களின் முன்னாள் தனி உதவியாளர் மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமாரை இன்று சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம்,ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 10 ஆண்டுகால தனி உதவியாளராக இருந்து வந்தவர்.
இந்த நிலையில்,அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி,பணமோசடி செய்ததாக நெய்வேலியினைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,முன்ஜாமீன் கோரிய மணியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் மணியை,கடந்த நவம்பர் மாத இறுதியில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில்,அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி பணமோசடியில் ஈடுபட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அவர்களின் முன்னாள் உதவியாளர் மணியின் நண்பர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.3 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த செல்வக்குமாரை சேலம் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத படங்களின் வரிசையில் பல படங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான படம் என்றால்,…
லக்னோ : நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி…
சென்னை : வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…
சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு…
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…
துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…