#Breaking: 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்- முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்..!

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும்,அதன்படி,தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் புதிய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளனர் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
அதன்படி,முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் நாளை காலை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025