#Breaking:மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு -சிபிசிஐடிக்கு மாற்றம்

Published by
Edison

சென்னை:மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம், வருமானத்துக்கு அதிக்காகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி  அவரது வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும்,சந்தன மரத்தில் இருந்து செய்யப்பட்ட பொருட்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியதாக கூறப்பட்டது. சந்தன கட்டைகளால் ஆன பொருட்கள் கைப்பற்றப்பட்டதால் நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை வைத்திருந்ததாக தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,கடந்த டிச.2 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அதன்படி,அவரது செல்போன் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.மேலும்,வெங்கடாசலம் மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று அதிமுகவினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில்,வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். வேளச்சேரி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில்,தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

 

Recent Posts

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

58 minutes ago

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

2 hours ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

2 hours ago

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…

3 hours ago

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

4 hours ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

5 hours ago