இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால், மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனுக்கு, சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டதாக கூறி, தற்போது புழல் சிறைக்கு மாற்றம் செய்துள்ளனர்.
இதனையடுத்து, மணிகண்டனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது புழல் சிறையில் இருந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு முன்னாள் அமைச்சர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.