#Breaking:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழக்கு – நாளை ஒத்திவைப்பு!

Published by
Edison

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து,கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அதன்பின்னர்,மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,ஜெயக்குமார் அவர்கள் தாக்கல் செய்த மனுவின் நகலை காவல்துறை தரப்பிற்கு வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recent Posts

பட்ஜெட் 2025 : தமிழ்நாட்டின் ஒரு கோரிக்கை கூட சேர்க்க மனம் வரவில்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

பட்ஜெட் 2025 : தமிழ்நாட்டின் ஒரு கோரிக்கை கூட சேர்க்க மனம் வரவில்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…

23 minutes ago

‘அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு’ ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…

56 minutes ago

நீங்களா இப்படி? பெண் ரசிகைக்குக்கு லிப் கிஸ் கொடுத்த உதித் நாராயண்!

புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…

1 hour ago

மத்திய பட்ஜெட் எதிரொலி: ரூ.62 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.360 உயர்வு!

சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல்…

1 hour ago

ஆட்டநாயகன் ஷிவம் துபே! ஹர்திக் பாண்டியாவுக்கு விருது இல்லையா? டென்ஷனான ரசிகர்கள்!

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று விட்டது. மூன்று போட்டியில் வெற்றிபெற்று 3-1…

2 hours ago

பட்ஜெட் 2025 : “தமிழகத்துக்கு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்” – ஜெயக்குமார்

சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை…

3 hours ago