#Breaking:கோயிலில் முதல் மரியாதை ‘கடவுளுக்கு’ மட்டுமே நீதிமன்றம் அதிரடி!

Default Image

பொதுவாக கோயில்களில் விஐபிக்கள் தரிசனம்,முக்கிய பிரமுகர்களுக்கு தனி பாதை,தனி மரியாதை ஆகியவை இருந்து வரும் நிலையில், கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே என்றும் மாறாக மனிதனுக்கு அல்ல எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சண்டிவீரன் கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அஅதில் சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது சட்டத்திற்கு எதிரானது என மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சண்டிவீரன் கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை,கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்