#BREAKING : சிறையில் தந்தை, மகன் மரணம்! தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

சிறையில் மரணமடைந்த சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவர் அறிக்கையின் பேரிலும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக பிறப்பிக்க  உள்ள உத்தரவின் அடிப்படையிலும் ,இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்,மேலும் , அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
TNGovt - mathiazhagan mla
RR player Vaibhav Suryavanshi
meenakshi amman temple
CM MK Stalin say an important announcement about Colony word
Tamilnadu CM MK Stalin speech in TN Assembly
Pakistan - Kashmir