#BREAKING: சசிகலாவுக்கு எதிராக ஈபிஎஸ் , சி.வி சண்முகம் கூட்டத்தில் தீர்மானம்..!

Published by
murugan

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கடந்த சில நாட்களாக சசிகலாவை அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்களும் தொடர்ந்து தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி வருகிறது. சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் பேசி வருவதால் அதிமுகவில் குழப்பமும் ஏற்படும் ஏற்படும் நிலை உள்ளதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் சமீபத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது,  கட்சி உறுப்பினராக இல்லாத வரும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்கு கூட தகுதி இல்லாதவர் அதிமுக பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என கண்டனம் தெரிவித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும்  சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Published by
murugan

Recent Posts

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

54 minutes ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

3 hours ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

4 hours ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

4 hours ago