#Breaking:சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வேப்பேரி,எழும்பூர் மற்றும் என்.எஸ்.சி போஸ் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்,சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்த நிலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வீடுகள்,அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.