மின்னணு உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மையமாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 16% ஆகும். மேலும் கணினி, மின்னணுவியல் மற்றும் ஒளியியல் பொருள்கள் உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் புதிய தொழில்கொள்கையின் அடிப்படையில் மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரிவிலக்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீடு தொகையில் 30% வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையில் உற்பத்தி 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்த்துதல். இந்தியாவில் மொத்தம் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பினை 25% உயர்த்துதல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிதி நிறுவங்களில் இருந்து பெறப்படும் காலக்கடனுக்கு 5% வரை வட்டி மானியம். மின்னணு பழுது பார்க்கும் பூங்காங்க்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கள் வசதிகள் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
முதல் முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு 6 மாத காலங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 4000 ரூபாய் வீதம் பயிற்சிமானியம், பெண் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம் என அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…
கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.…
சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் ,…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …