தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து கட்சிகளும் தொகுதி மற்றும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து, பாதிப்பு நாள் ஒன்றுக்கு ஆயிரத்தை நெருங்குகிறது.
இதனை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அனைவரும் மாஸ்க் மற்றும் பொது சுகாதாரத்துவதை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுவும் தேர்தல் நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பீகார் மாநில சுகாதார அதிகாரிகள் சுதிர்குமார், ரோகிணி ஆகிய இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் கொரோனாவுக்கு மத்தியில் தேர்தல் நடத்தியது எவ்வாறு என்று அம்மாநில அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரும் சூழலில், இந்த இரண்டு அதிகாரிகளை தலைமை அதிகாரி நியமித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…