தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இதில் சில இடங்களில் வேட்பாளர் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சில இடங்களில் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ரத்தான நிலையில், இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம். தேர்தல் ரத்தானதுக்கு உரிய காரணத்தை மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் விளக்கத்தை பெற்று, ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மறைமுக தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…