#BREAKING: கருமுட்டை விற்பனை – மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

சிறுமியின் கருமுட்டையை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை.

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 2 மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இவர்களிடம் 16 வயது சிறுமியிடம் 4 ஆண்டுகளாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் சிறுமியின் தாயார் மற்றும் அவரது இரண்டாவது கணவர், இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட டைலர் மாலதி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தது. மேலும், சிறுமியின் ஆதார அட்டையில் வயதை போலியாக மாற்றி கருமுட்டையை விற்பனை செய்வதற்கு உதவிய ஜான் என்ற இளைஞரையும் போலீசார் இன்று கைது செய்தனர். சிறுமியின் கருமுட்டை எந்த மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்பட்டது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சமயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுமியின் கருமுட்டை விற்பனை என்பது விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை. கருமுட்டை விற்பனை தொடர்பாக காவல்துறையிடம் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். இதுதொடர்பாக முழுமையாக உரிய விசாரணை நடத்திய பிறகு கருமுட்டை விற்பனையில் தொடர்பியிருந்தால் தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படும் என கூறினார். இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago