சென்னை:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார் மற்றும் பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகளையும் இருவருக்கு முதல்வர் வழங்கியுள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் செலவில் 2.58 ஹெக்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை (environment park) முதல்வர் ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தற்போது திறந்து வைத்துள்ளார்.
இந்த பூங்காவில் சதுப்பு நில விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுமார் 41 பறவை இனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து,தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ‘பாரதியார் நினைவு நூற்றாண்டு விருதுகளை’ முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி,சீனிவாசன்,மணிகண்டன் ஆகியோருக்கு ரூ.3 லட்சத்துடன் பாராட்டு சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.பாரதியார் குறித்தும்,அவரது படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்ததால் இவர்கள் இருவருக்கும் பாரதியார் நினைவு நூற்றாண்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…