முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் சற்றுமுன் பதவியேற்றார். அப்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று கூறி தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள துரைமுருகன், திமுக அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்று உள்ளார். அவருக்கு சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற துரைமுருகனை அவர்களை தொடர்ந்து, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் மற்ற திமுக அமைச்சர்களும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் பதவி ஏற்று வருகின்றனர்.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…