#BREAKING : திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி புகார்..!

Default Image

திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது.

சென்னையில் சாலை அமைக்கும் பணியின் போது, ஒப்பந்ததாரர்களுடன தகராறு செய்து, அதை நிறுத்திய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பறக்கும்படை பொறியாளரை, தாக்கியதாக கே.பி.சங்கர் மீது  புகார்கள் எழுந்த  நிலையில், கே.பி.சங்கர் கட்சியில் இருந்து விடுவிக்கப்படுவதாக, திமுக பொதுச்செயலாளர்  நேற்று முன்தினம் அறிக்கை  வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று தன் மீதான குற்றசாட்டு குறித்து திமுக தலைமையிடம் விளக்கமளித்தார்.  இதனை தொடர்ந்து, மாநகராட்சி பொறியாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக, திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திமுக எம்.எல்.ஏ சங்கர் சார்பிலும் தனியாக புகாரை அளிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ்  அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்