#BREAKING: வியூகத்துக்கு முற்றுப்புள்ளி.. திமுக கூட்டணி தொடரும் – முதலமைச்சர் ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடி வருகையால் திமுக –  பாஜக கூட்டணி ஏற்படும் என்று தகவல் பரவிய நிலையில், முதலமைச்சர் விளக்கம்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. பிரதமர் மோடி வருகையால் திமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட போவதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருந்தார். பிரதமர் தமிழகம் வந்த சூழலில், முதலமைச்சரும், பிரதமரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். இதை பார்த்து பிரதமரின் வருகையால் திமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில் தமிழக்தில் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என்று கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்ளேவ் கருத்தரங்கில் காணொளி வாயிலாக பேசிய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். சிபிஎம் உடனான கூட்டணி, கொள்கை கூட்டணி, அது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 2 பயணமாக சென்னை வந்த பிரதமர் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா முடிந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பிரதமா் இரவு தங்கினாா். அப்போது, மாநிலத் தலைவா் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த நிா்வாகிகள் உள்ளிட்டவர்களை சந்தித்தாா். பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் பாஜத தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை தமிழக அரசு மிக சிறப்பாக செய்தது.

இதில் தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டு தொன்மை பிரதிபலிக்கப்பட்டது என்பது ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன். செஸ் ஒலிம்பியாட் விழா மூலமாக இந்தியாவையும் நமது கலாசாரத்தையும் பெருமைப்படுத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் மு,க.ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் என கூறினார். தமிழக முதல்வர், முதல்வராக நடந்துகொண்டார். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக முதல்வரை பாராட்டுகிறோம். அதற்காக, திமுக – பாஜக கூட்டணியா என கேட்டால் இல்லை. பாஜக கொள்கை ரீதியாக செல்லக்கூடிய கட்சி என தெரிவித்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

38 mins ago

கனமழை எதிரொலி : குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை!

தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…

38 mins ago

இதை யாரும் எதிர்பாக்கல..! 7 புதிய சேவைகளுடன்… புதிய லோகோவில் BSNL..!

டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…

1 hour ago

சளி ,இருமல் ,உடல் வலியை குணமாக்கும் சுக்கு பால் செய்யும் முறை..!

சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால்  செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…

2 hours ago

16வது பிரிக்ஸ் மாநாடு : ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…

2 hours ago

“கேப்டனிடமிருந்து சுதந்திரம் தேவை”..ரோஹித் சர்மா கொடுக்கிறாரா? முகமது ஷமி பேச்சு!

பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…

2 hours ago