#Breaking:திமுக,அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு!

Default Image

கோவை வெள்ளலூர் பேரூராட்சியின் திமுக,அதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக,வெள்ளலூர் பேரூராட்சியில்  8 வார்டுகளில் அதிமுகவும்,7 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றிருந்த  நிலையில்,வெள்ளலூர் பேரூராட்சி தலைவர்,துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலின்போது அதிமுக,திமுக இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குப்பெட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டது.இதன் காரணமாக மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்,திமுக கவுன்சிலர்கள் 7 பேர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் உட்பட மொத்தம் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரி பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில்,கவுன்சிலர்கள் மீது போத்தனூர் காவல்நிலையத்தில் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்