தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழ் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் இதனை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. விருப்ப மனுவை ரூ.1,000 கட்டணம் செலுத்தி திமுகவினர் விருப்ப மனு பெறலாம் என்று கூறியுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்.24 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதி விண்ணப்ப கட்டணமாக ரூ.25,000 என்றும் மகளிர் மற்றும் தனி தொகுதிகளுக்கு ரூ.15,000 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 2 முதல் 5 வரை நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…