#Breaking:அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்;மார்ச் 4 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு!

Default Image

வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும்;இதனால்,மார்ச் 4 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு.

வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக,நாளை நாகை,மயிலாடுதுறை,காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகம்,புதுவையில் மார்ச் 4 ஆம் தேதியன்று அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,மார்ச் 4 ஆம் தேதி தமிழகத்தில் கடலூர்,விழுப்புரம்,கள்ளகுறிச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்