#Breaking: தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Default Image

தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்க்கு முன்னே இரண்டாம் நிலை வாரிசாக அறிவித்த நிலையில், தற்பொழுது நேரடி வாரிசாக மாற்றி அமைத்தது உயர்நீதிமன்றம்.

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வாகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். மேலும், தீபா வேதா நிலையத்திற்குள் செல்ல முயற்சித்ததால் அவர் மீது நடவடிக்கை வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் புகார் அளித்த நிலையில், மீறி செல்ல முயற்ச்சித்தால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்