#Breaking:அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிவிப்பு!

Published by
Edison

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.அதன்படி,தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 760 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.இதனையடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.மேலும்,அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையின் கிழக்கு கடற்பகுதி வழியாக வட தமிழக கடற்பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகரும்.

இதன்காரணமாக,கடலோர தமிழகம்,புதுவை,காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மிதமான  மழை,நாளை டெல்டா மாவட்டங்கள் கடலூர்,புதுக்கோட்டை,விழுப்புரம்,செங்கல்பட்டு,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை மற்றும் மார்ச் 5,6 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.எனினும், அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விளக்கிக் கொள்ளப்படுகிறது”, என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,தமிழக கடலோரப் பகுதி,மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று,நாளை,நாளை மறுநாள் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும்,தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

24 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

43 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

9 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

11 hours ago