திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை. கிராம மக்கள் சாலை மறியல்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் வடுக்களே இன்னும் மறையாத நிலையில், திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர்களுடன் இருந்து உணவருந்திவிட்டு சென்னார் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவல் அளிக்கவில்லை என பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவியின் மரணத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கு பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…