#BREAKING : அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றம் – ஈபிஎஸ் தரப்பிடம் சாவி ஒப்படைப்பு..!

Default Image

அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு,  அதிமுக அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகரனிடம் சாவி  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 11-ஆம் தேதி பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகத்தில் வன்முறை நடந்ததால் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார்.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டது எனவும் காவல்துறை தரப்பில் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் சீல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருதரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. இந்த  நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மேலும், அதிமுக தலைமையகத்தில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பினை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், 10 நாட்களுக்கு பின் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு,  அதிமுக அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகரனிடம் சாவி  ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, அதிமுக அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மேலும், ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகம் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்